லெ.முருகபூபதிலெ. முருகபூபதி (நீர்கொழும்பு, இலங்கை) 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.

1977ல் இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய இவர், 1985ல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என்பன எழுதியும் வெளியிட்டும் வருகிறார்.


வெளியான நூல்கள்
சுமையின் பங்காளிகள் (சிறுகதைகள், 1975)
சமாந்தரங்கள் (சிறுகதைகள், 1986)
சமதர்ம பூங்காவில் (பயண இலக்கியம், 1990)
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (நினைவுகள், 1995)
வெளிச்சம் (சிறுகதைகள்)
எங்கள் தேசம் (சிறுகதைகள்)
பறவைகள் (நாவல்)
பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்)
இலக்கிய மடல் (கட்டுரைகள்)
சந்திப்பு (நேர்காணல்)
இலங்கையில் பாரதி (ஆய்வு)
கடிதங்கள் (கடிதங்கள்)
மல்லிகை ஜீவா நினைவுகள் (நினைவுகள், 2001)
ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள் (நினைவுகள்)











Letchumanan Murugapoopathy
170-HOTHLYN DRIVE,
CRAIGIEBURNE
VICTORIA 3064
AUSTRALIYA

TP: +61 (0)3 9308 1484
MOB: +61 (0)41 66 257 66
WEB: www.murugapoopathy.info
EMAIL: letchumananm@gmail.com

Copyright ©2008. Powered by Kirushna